Saturday, September 21, 2024
Homeநியூ யார்க் பூங்காவில் மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு : ஒருவர் பலி.. 6 பேர் படுகாயம்..!

நியூ யார்க் பூங்காவில் மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு : ஒருவர் பலி.. 6 பேர் படுகாயம்..!

வன்முறைகளின் உற்பத்திக் களமாக அமெரிக்கா மாறி வருவதை நாளுக்கு நாள் அதிகமாக அரங்கேறி வரும் சம்பவங்கள் நிரூபிப்பதாக உள்ளது. பொது இடங்களில் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் வாரத்திற்கு ஒன்று நடப்பதால் அந்நாட்டின் மக்களுக்கு வன்முறை என்பது நார்மலைஸ் ஆனதாக மாறி வருகிறது.

அந்த வகையில், நியூயார்க் நகரில் உள்ள மேப்பில்வுட் பூங்காவில் நேற்று மாலை 6.20 மணியளவில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் பூங்காவில் இருந்தவர்களில் 6 பேர் குண்டடி பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவ இடத்தில் இருந்து மர்ம நபர்கள் தப்பியோடிய நிலையில் போலீசார் அவர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். அமெரிக்காவில் ஏறத்தாழ அனைவரும் சட்டப்பூர்வமாகத் துப்பாக்கி வைத்துள்ளனர். அதற்கான தோட்டாக்களை அவர்கள் மளிகைக் கடைகளில் உள்ள மெஷினில் ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுப்பதுபோல் எடுத்துக்கொள்ளும் வசதியும் வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments