சாவர்க்கர் குறித்த பேச்சுக்கு மன்னிப்பு கேட்ட சுதா கொங்கரா : நடந்தது என்ன..!

இயக்குனர் சுதா கொங்கரா சமீபத்திய நேர்காணல் ஒன்றில் சாவர்க்கர் குறித்து பேசியது தொடர்பாக மன்னிப்பு கேட்டுள்ளார்.

சுதா கொங்கரா தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக திகழ்பவர் சுதா கொங்கரா. இறுதிச்சுற்று, சூரரைப் போற்று என இவரது இயக்கத்தில் வெளியான இரண்டு படங்களும் சுதாவை, வேறலெவல் பிரபலம் ஆக்கியது. அதிலும், சூரரைப் போற்று’ படத்திற்கு பிறகு இவரும், சூர்யா மீண்டும் எப்போது இணைய போகிறார்கள் என உச்சக்கட்ட எதிர்பார்ப்பில் இருந்தனர் ரசிகர்கள்.

கடந்த 2020 ஆம் ஆண்டு சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான படம் ‘சூரரைப் போற்று’. கொரோனா காலக்கட்டத்தில் நேரடியாக ஓடிடியில் ரிலீசான இப்படம் வேறலெவல் ஹிட்டடித்த்து. ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற இப்படத்திற்கு பின்பாக சூர்யா, சுதா கொங்கரா மீண்டும் இணைவதற்காக ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர்.

இதனையடுத்து ரசிகர்களின் எதிர்பாப்பை பூர்த்தி செய்யும் விதமாக இருவரும் ‘புறநானூறு’ படத்தில் இணைந்தனர். இந்நிலையில் அண்மையில் நேர்காணல் ஒன்றில் பேசிய சுதா கொங்கரா, பல எதிர்ப்புகளை கடந்து சாவர்க்கர் தனது மனைவியை படிக்க வைத்ததாக கூறியிருந்தார். தனது இந்த பேச்சுக்கு மன்னிப்பு தெரிவித்து தற்போது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார் சுதா கொங்கரா.

இது தொடர்பாக தன்னுடைய பதிவில், என் தவறுக்கு வருந்துகிறேன். எனது பதினேழாவது வயதில் பெண் கல்வி குறித்த எனது வகுப்பு ஒன்றில் எனது ஆசிரியர் சொன்னதை வைத்து நான் அந்த நேர்முகத்தில் பேசியிருந்தேன். ஒரு வரலாற்று மாணவியாக அதன் உண்மைத் தன்மையை நான் சோதித்திருக்க வேண்டும். அது என் பக்கத்தில் தவறுதான்.

எதிர்காலத்தில் அப்படி நேராது என்று உறுதியளிக்கிறேன். மற்றபடி ஒருவருடைய உன்னதமான செயலுக்கான புகழை இன்னொருவருக்குத் தர வேண்டும் என்ற நோக்கம் எனக்கு இல்லை. எனது பேச்சில் இருந்த தகவல் பிழையை சுட்டிக் காட்டியவர்களுக்கு நன்றி. ஜோதிபா மற்றும் சாவித்திரிபாய் புலே ஆகியோருக்கு என்றும் தலை வணங்குகிறேன். இவ்வாறு தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார் சுதா கொங்கரா.

 

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles