Tuesday, September 24, 2024
Homeதயாரிப்பாளர் சங்கத்திற்கு கெடு வைத்த விஷால் : காரணம் என்ன..?

தயாரிப்பாளர் சங்கத்திற்கு கெடு வைத்த விஷால் : காரணம் என்ன..?

தென் இந்திய தயாரிப்பாளர் சங்கத்தில் தலைவராக நடிகர் விஷால் இருந்தபோது சங்கத்தின் பணத்தில் முறைகேடு செய்ததாக எழுந்த விவகாரத்தில் நடிகர் விஷாலுக்கு எதிராக தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் நடவடிக்கை எடுத்தது.

அதன்படி, இனி விஷாலை வைத்து படம் தயாரிக்கும் தயாரிப்பாளர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், சங்கத்தை கலந்தாலோசிக்க வேண்டும் என சங்கம் தரப்பில் கோரிக்கை விடுத்துள்ளது.

சங்கத்தில் இருந்து முறைகேடாக ரூ.12 கோடி செலவழித்த தொகையை திரும்ப அளிக்குமாறு பலமுறை கூறியும் விஷால் பதில் அளிக்கவில்லை என தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் விஷால் நடிக்கும் புதியப் படங்களுக்கு கட்டுப்பாடுகள் அறிவித்துள்ளது.

இந்நிலையில், தொடர்ந்து படங்களில் நடிப்பேன், முடிந்தால் தடுத்து பாருங்கள் என நடிகர் விஷால் தமிழ்த் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு சவால் விடுத்தார்.

அதுக்குறித்து தற்பொழுது தயாரிப்பாளர் சங்கத்திற்கு விஷால் கெடு வைத்துள்ளார். தன் மீது குற்றம் சுமத்தி வெளியிடப்பட்ட அறிக்கையை திரும்ப பெருமாறு கேட்டுள்ளார். அறிக்கையை திரும்ப பெறாவிட்டால் சட்டபடி நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார். மேலும் அவர்மீது குற்றம் சாட்டப்பட்டு அனுப்பப்பட்ட அறிக்கைக்கு பதிலளிக்க வேண்டும் எனவும். இந்த அறிக்கையை வன்ம அறிக்கை என சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்கான பதிலை விரைவில் தயாரிப்பாளர் சங்க தரப்பினரிடம் இருந்து வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments