Wednesday, September 25, 2024
Homeஏறாவூரில் குடும்பஸ்தர் தற்கொலை..!

ஏறாவூரில் குடும்பஸ்தர் தற்கொலை..!

ஏறாவூர் பொலிஸ் பிரிவு தாமரைக்கேணி பகுதியில் ஒரு குழந்தையின் தந்தையான 42 வயதுடைய அசனார் மர்சூக் என்ற குடும்பஸ்தர் நேற்று (11) மாலை தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு குவைத் நாட்டுக்கு பணிப்பெண்ணாக சென்ற குறித்த நபரின் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து முரண்பாடே தற்கொலைக்கு காரணமென சந்தேகிக்கபடுவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பிரேத பரிசோதனையை மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம்.நஸீர் மேற்கொண்டதோடு சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுமப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments