Friday, February 6, 2026
Homeசிறுவர் இல்லத்தில் இருந்து நான்கு சிறுவர்கள் மாயம்..!

சிறுவர் இல்லத்தில் இருந்து நான்கு சிறுவர்கள் மாயம்..!

வெல்லவாய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எல்ல வீதி பிரதேசத்தில் அமைந்துள்ள சிறுவர் இல்லத்திலிருந்து நான்கு சிறுவர்கள் காணாமல் போயுள்ளதாக வெல்லவாய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

16 மற்றும் 14 வயதுடைய இரண்டு சிறுவர்களும் 15 வயதுடைய இரண்டு சிறுவர்களும் காணாமல் போயுள்ளதாக தெரிவித்தனர்.

இந்த நான்கு குழந்தைகளும் எவ்வித தகவலும் தெரிவிக்காமல் அனாதை இல்லத்தை விட்டு வெளியேறியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

RELATED ARTICLES

Most Popular