Wednesday, October 16, 2024
google.com, pub-5376066798149206, DIRECT, f08c47fec0942fa0
HomeMain Newsஇஸ்ரேல் இராணுவ முகாம் மீது ட்ரோன் தாக்குதல்

இஸ்ரேல் இராணுவ முகாம் மீது ட்ரோன் தாக்குதல்

இஸ்ரேலின் வட பகுதியில் உள்ள இராணுவ முகாம் ஒன்றை இலக்கு வைத்து நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் நான்கு இஸ்ரேல் படை வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் ஏழு பேர் படு காயம் அடைந்துள்ளனர்.
இந்த தாக்குதலுக்கு ஹிஸ்புல்லா இயக்கம் உரிமை கோரி உள்ளது.
இஸ்ரேலின் பிரதான துறைமுக நகரமான ஹைபா நகரில் இருந்து 20 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள இராணுவ தளத்தை இலக்கு வைத்தே இந்த ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலில் நான்கு பேர் கொல்லப்பட்டதாகவும் 7 பேர் காயம் அடைந்ததாக்வும் இஸ்ரேல் பாதுகாப்பு தரப்பு ஊர்ஜிதம் செய்துள்ளது.
தென் லெபனான் மீதும் பேரூட் நகர் மீதும் நடத்தப்பட்டு வரும் தாக்குதலுக்கு பதிலடியாக இந்த இராணுவ பயிற்சி முகாம் இலக்கு வைக்கப்பட்டதாக ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதலில் ஏழு படைவீரர்கள் உட்பட 61 பேர் காயம் அடைந்துள்ளதாகவும் அதில் பலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் இஸ்ரேல் துணை மருத்துவ பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இந்த தாக்குதலில் ஏழு படைவீரர்கள் உட்பட 61 பேர் காயம் அடைந்துள்ளதாகவும் அதில் பலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் இஸ்ரேல் துணை மருத்துவ பிரிவினர் தெரிவித்துள்ளனர்
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments