Sunday, June 15, 2025
HomeMain NewsAmericaநியூயார்க் பாலத்தில் மெக்சிகன் கடற்படை பாய்மரக் கப்பல் மோதியதில் 22 பேர் காயம்

நியூயார்க் பாலத்தில் மெக்சிகன் கடற்படை பாய்மரக் கப்பல் மோதியதில் 22 பேர் காயம்

நியூயார்க் நகரின் புரூக்ளின் பாலத்தில், உயரமான மெக்சிகன் கடற்படை பயிற்சி கப்பல் மோதியதில் 22 பேர் காயமடைந்துள்ளனர். மேலும் நான்கு பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்.

நேற்று சனிக்கிழமை மாலை இடம்பெற்ற இந்த விபத்தின் போது கம்பங்களின் சில பகுதிகள் தளத்தின் மீது விழுந்ததாகக் கூறப்படுகிறது.

சம்பவத்தின் போது பலர் கம்பங்களின் மீது நின்று கொண்டிருந்ததால் அவர்களுக்கு காயங்கள் ஏற்பட்டதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நியூயார்க் நகரத்தின் அவசர மேலாண்மை “ஒரு சம்பவத்திற்கு எதிர்வினையாற்றுவதாக” மேலும் எந்த விவரமும் தெரிவிக்காமல் கூறியது.

அத்துடன், புரூக்ளின் பாலத்திற்கு எந்த சேதமும் ஏற்படவில்லை என்று நியூயார்க் மேயர் கூறினார்.

கப்பல் சேதமடைந்ததை மெக்சிகன் கடற்படை உறுதிப்படுத்தியது. சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகக் கூறியுள்ளது.

கப்பலின் பாதையை கவனித்துக் கொண்டிருந்த மக்கள், கம்பங்கள் பாலத்தில் மோதியதால், அங்கிருந்து ஓடிவிட்டனர். நியூயார்க் நகர தீயணைப்புத் துறை அதிகாரிகள் மேலதிக நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

புரூக்ளின் பாலம், மன்ஹாட்டனில் உள்ள சவுத் ஸ்ட்ரீட் சீபோர்ட் மற்றும் புரூக்ளினில் உள்ள டம்போ பகுதிகளைத் தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

“சுற்றுப்புறப் பகுதியில் அதிக போக்குவரத்து நெரிசல் மற்றும் அவசரகால வாகனங்கள் அதிக அளவில் இருக்கும் என எதிர்பார்க்கலாம்” என்று பொலிஸார் X இல் தெரிவித்தனர்.

ஒரு நல்லெண்ணப் பயணமாக அமெரிக்கா வந்த குவாஹ்டெமோக் கப்பலில் 200 க்கும் மேற்பட்ட பணியாளர்கள் இருந்ததாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments