டெல்லியில் நேற்று நடந்த 62வது லீக் ஆட்டத்தில் சி.எஸ்.கே, ராஜஸ்தான் அணிகள் மோதின. முதலில் ஆடிய சிஎஸ்கே 187 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய ராஜஸ்தான் 188 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில், தோல்விக்கு பிறகு சிஎஸ்கே அணி கேப்டன் எம்.எஸ்.தோனி கூறியதாவது:
நாங்கள் இன்று பேட்டிங்கில் நிர்ணயித்த இலக்கு ஒரு நல்ல ஸ்கோர் என நினைக்கின்றேன். ஏனென்றால் விக்கெட்டுகளை நாங்கள் அதிக அளவு இழந்ததால் கீழ் வரிசை வீரர்களுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது. விக்கெட்டுகள் அதிகம் இழப்பதன் மூலம் 20 ஓவரும் முழுமையாக விளையாட முடியாத நிலை ஏற்படும். ஆனால் பிரவீஸ் அபாரமாக விளையாடி சரியான வாய்ப்பை பயன்படுத்தி ரன்களை சேர்த்தார்.
எங்கள் அணியின் ரன்ரேட்டும் நன்றாகத்தான் இருந்தது. பவர் பிளேவில் நாங்கள் அதிக அளவு விக்கெட்டுகளை இழந்தோம். கூடுதலாக விக்கெட் இழந்ததால் எங்களால் ரிஸ்க் எடுத்து விளையாட முடியவில்லை.
பவர்பிளேவில் நாங்கள் தொடர்ந்து மோசமாக செயல்பட்டு வருகிறோம். முதல் ஆறு ஓவரில் இவ்வளவு அதிக ரன்களை விட்டுக் கொடுக்கக் கூடாது.
பேட்ஸ்மேன்கள் தங்களுடைய திறமையை புரிந்து கொண்டு விளையாட வேண்டும். பேட்ஸ்மேன்கள் தொடர்ந்து ஒரே மாதிரியான கன்சிஸ்டன்டுடன் விளையாட வேண்டும்.
உங்களால் சிக்சர்களை எந்த நிலையிலும் அடிக்க முடியும் .உங்களுக்கு நீங்களே அழுத்தத்தை செலுத்திக் கொள்ளாதீர்கள். சீனியர் வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களிடமிருந்து கற்றுக் கொள்ளுங்கள். விளையாட்டை எப்படி அணுக வேண்டும் என்பதை கற்றுக் கொள்ள வேண்டும். இதுதான் என்னுடைய அறிவுரையாக இளைஞர்களுக்கு சொல்ல விரும்புகிறேன் என தெரிவித்துள்ளார்.