நாடுமுழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் நால்வர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கேகாலை, வாழைச்சேனை, மாத்தளை மற்றும் கெக்கிராவ ஆகிய இடங்களில் இந்த விபத்துகள் பதிவாகியுள்ளதாக மேலும் தெரிவித்துள்ளனர்.
அதன்படி, கேகாலை-பெரகலை வீதியில் மரக்கட்டைகளை ஏற்றிச் சென்ற லொறியும் மோட்டார் சைக்கிளும் மோதியதில் 53 வயது மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் உயிரிழந்தார்.
வாழைச்சேனை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 85 வயது முதியவர் ஒருவர் உயிரிழந்தார்.
இதற்கிடையில், மாத்தளை-வத்தேகம வீதி உக்குவெல பகுதியில், முச்சக்கர வண்டி சாரதியொருவர் கட்டுப்பாட்டை இழந்து இடதுபுறமாகச் சென்று கார் மீது மோதியதில் முச்சக்கர வண்டியின் சாரதி உயிரிழந்தார்.
கெகிராவ-தம்புள்ள வீதியில் அலகமுவ பகுதியில் கண்டியிலிருந்து அநுராதபுரம் நோக்கிச் சென்ற பஸ் ட்ராக்டரில் மோதியதில் 49 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.