ஹோண்டா நிறுவனம் புதிய மின்சார காரை இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஹோண்டா கார்ஸ் இந்தியா தலைமை நிர்வாக அதிகாரி, மே மாத இறுதிக்குள் இந்திய சந்தைக்கு புதிய மின்சார வாகனத்தை (EV) அறிமுகம் செய்ய இருப்பதாக டெல்லியில் நடைபெற்ற சார்வில்லா நிகழ்ச்சியில் தெரிவித்தார்.
இந்த மின்சார கார் Elevate மொடலில் உருவாக்கப்படுவதில்லை. இந்தியர்களின் விருப்பத்திற்கு ஏற்ப புதிய EV என்று அவர் தெளிவுபடுத்தினார்.
புதிய மின்சார வாகன மொடல் SUV-யாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த கார் Hyundai Creta EV, Tata Curvv EV, MG ZS EV, Maruti e-Vitara EV வரிசையில் போட்டியிடும்.
ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனம் இந்த காரை அறிமுகப்படுத்தும் முன் சார்ஜிங் நெட்வொர்க்கை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.
மின்சார வாகனங்கள் மட்டுமின்றி, ஹோண்டா தனது ஹைப்ரிட் வரிசையை விரிவுபடுத்துவதிலும் கவனம் செலுத்தி வருகிறது. எதிர்காலத்தில் ஹைப்ரிட் மாடல்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
ஹோண்டா அதன் e-HEV ஹைப்ரிட் தொழில்நுட்பத்தை ஆதரிக்கும் புதிய தளத்தை உருவாக்கி வருவதாக தகவல்கள் உள்ளன. இந்த அமைப்பில் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் புதிய மின்சார ஆல்-வீல்-டிரைவ் (AWD) அமைப்பு இருக்கலாம்.
தற்போது, ஹோண்டா இந்தியாவில் City, Amaze, Elevate ஆகிய ஹைப்ரிட் மாடல்களை விற்பனை செய்கிறது.
இந்த புதிய EV மற்றும் விரிவாக்கப்படும் ஹைப்ரிட் வரிசை, ஹோண்டாவின் இந்திய மின் மற்றும் பைப்ரிட் சாதனைகள் வணிகத்தை வலுப்படுத்தும் திட்டமாகும்.