நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அர்ச்சுனா எம்.பிக்கு உத்தரவு

தெல்லிப்பழை மருத்துவமனையின் புற்றுநோய் பிரிவு மருத்துவர் ஒருவருக்கு எதிராகச் சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பிய குற்றச்சாட்டில், பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா உள்ளிட்ட இருவருக்கு எதிராக யாழ்ப்பாண நீதிமன்றில் வழக்கு நேற்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

நிகழ்நிலை காப்பு சட்டத்தின் கீழ் தொடரப்பட்ட வழக்கே நேற்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, குற்றம் சாட்டப்பட்டவர்களில் வைத்தியர் ஒருவர், சட்டத்தரணி ஊடாக நேற்று நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தார்.

எனினும், பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நேற்றையதினம் நீதிமன்றில் முன்னிலையாகவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, வழக்கு விசாரணையை எதிர்வரும் 24 ஆம் திகதிக்கு நீதிவான் ஒத்திவைத்தார்.

அன்றைய தினம் இராமநாதன் அர்ச்சுனா உள்ளிட்ட இருவரையும் தவறாது நீதிமன்றில் முன்னிலையாகுமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles