2026ஆம் ஆண்டுக்கான பமிலி பிஸ்னஸ் கிரௌத் – லண்டன் பிராந்திய விருதை ஈழத் தமிழர்களுக்கு சொந்தமான பி. ரி. எம். இன்ரர்நஷனல் நிறுவனம் வென்றுள்ளது.
2 ஆயிரத்து 750 நிறுவனங்களுடன் போட்டியிட்டு பி. ரி. எம். இன்ரர்நஷனல் நிறுவனம் இந்த விருதை வென்றுள்ளது.
பி. ரி. எம். இன்ரர்நஷனல் நிறுவனம் தகரத்தில் அடைக்கப்பட்ட மீன் தயாரிப்புகளுக்கு புகழ்பெற்றது. இங்கிலாந்து மற்றும் ஐரோப்பாவில் இந்த நிறுவனம் தனது தயாரிப்புகளை விற்பனை செய்து வருகிறது.
பி. ரி. எம். நிறுவனம் ஈழத் தமிழர்களால் கடந்த 2000ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இந்த நிறுவனத்தை பாலசிங்கம், மனோகரன் ஆகியோர் நிர்வகித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
