ரொறன்ரோவில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் பலி!

ரொறன்ரோவின் ரான்செஸ்வேல்ஸ் விலேஜ் பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் நிகழ்ந்த கோர விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்தார்.

ரொறன்ரோ பொலிஸாரின் தகவலின்படி, நேற்று மாலை சுமார் 4:10 மணியளவில் ரான்செஸ்வேல்ஸ் மற்றும் ஹோவர்ட் பார்க் அவெனியூ சந்திப்பிற்கு அருகில் ஒரு மோட்டார் சைக்கிளும், எஸ்.யூ.வி ரக காரும் மோதிக்கொண்டன. விபத்தின் போது 20 வயது மதிக்கத்தக்க அந்த இளைஞர், காரின் அடியில் சிக்கிக்கொண்டார்.

மீட்புப் படையினரால் மீட்கப்பட்டு, உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார் என அறிவிக்கப்பட்டது.

காரைச் செலுத்திய 40 வயது மதிக்கத்தக்க நபர் சம்பவ இடத்திலேயே தங்கி, பொலிஸாரின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறார்.

நிறுத்தபட்டிருந்த காரின் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. அதிவேகமாகச் சென்றதும், மழை காரணமாக வீதி ஈரமாக இருந்ததும் இந்த விபத்திற்கு முக்கிய காரணங்களாக இருக்கலாம் எனத் தெரிகிறது.

விபத்தைத் தொடர்ந்து ஹோவர்ட் பார்க் அவெனியூ மற்றும் டண்டாஸ் ஸ்ட்ரீட் சந்திப்புகள் மூடப்பட்டுள்ளன. ஓட்டுநர்கள் மாற்றுப் பாதைகளைப் பயன்படுத்துமாறு பொலிஸர் அறிவுறுத்தியுள்ளனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles