மாகாண சபைகள் தேர்தலுக்கு நாம் இப்போதே தயார் – நாமல்

மாகாண சபைத் தேர்தலை இலக்காகக் கொண்டு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் முக்கிய மறுசீரமைப்பு நடவடிக்கைகள் மற்றும் தேர்தல் உத்திகள் இறுதி செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கட்சியின் தலைவர், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையில் நடைபெற்ற கட்சியின் செயற்குழு மற்றும் அரசியல் குழுவின் கூட்டத்தின் பின்னர் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்த போதே நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இதனைத் தெரிவித்தார்.

இக்கூட்டத்தின் போது, சட்டப்பூர்வமாக நடத்தப்படவிருக்கும் மாகாண சபைத் தேர்தலுக்கான வேட்புமனுக்களைக் கையாள்வதற்காக ஒரு விசேட குழுவை நியமிக்க பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளது.

மேலும், கட்சியின் அரசியல் அமைப்பில் திருத்தம் செய்யப்பட்டு, இதுவரை காலமும் மூன்று ஆக இருந்த கட்சியின் உபதலைவர் பதவிகளின் எண்ணிக்கை ஐந்து ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு கட்சியின் உயர்மட்டத்தில் கட்டாயம் பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும் என்ற நோக்கிலேயே இந்த இடஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நாமல் ராஜபக்ச குறிப்பிட்டார்.

அத்துடன், நாடாளுமன்றத்திற்குள் இருக்கும் ஏனைய அரசியல் கட்சிகள், சுயேச்சைக் குழுக்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து எதிர்கால அரசியல் பயணத்திற்கான இணக்கப்பாடுகளை எட்டுவதற்கும் பேச்சுகளை நடத்துவதற்கும் நாடாளுமன்ற உறுப்பினர் டி. வி. சாணக்கவிற்கு அரசியல் குழு உத்தியோகபூர்வ அனுமதி வழங்கியுள்ளது.

அரசியல் அரங்கில் உருவாகி வரும் புதிய கூட்டணிகள் குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், எதிர்க்கட்சிகளின் நகர்வுகள் குறித்து தாங்கள் கவலைப்படவில்லை என்றும் கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles