செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளின் 29ஆம் நாள் நடவடிக்கைகள் இன்று (19) முன்னெடுக்கப்பட்ட நிலையில், மேலும் 03 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டதுடன் புதிதாக 07 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை மேற்கொள்ளப்பட்ட அகழ்வு பணிகளின் அடிப்படையில் மொத்தம் 394 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவற்றில் 370 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
இன்றைய அகழ்வு பணிகளை நீதி அமைச்சர் உள்ளிட்ட விசேட குழுவினரும், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் அலுவலக ஆணையாளர்கள் குழுவினரும் நேரில் பார்வையிட்டுள்ளனர்.
