திருகோணமலை, சூரியபுர – ஜனசவிவெவ பகுதியில் நேற்று(04) காட்டு யானை தாக்கியதில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வான்எல பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.
உயிரிழந்த நபர் மற்றுமொருவருடன் இணைந்து வயல்வெளிக்குச் சென்றிருந்த போதே காட்டு யானை தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார் என்று ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் சூரியபுர பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
