லண்டனின் பொதுப் போக்குவரத்து நிறுவனத்தின் மீது நடத்தப்பட்ட இணையவழித் தாக்குதலுக்குப் பின்னால் இருந்த இரண்டு ஹக்கர்கள் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு தலா ஐந்தரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அத்துடன் இந்தத் தாக்குதலைச் சரிசெய்ய £29 மில்லியன் ($39.16 மில்லியன்) வரை செலவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
20 வயதான தல்ஹா ஜுபைர் மற்றும் 18 வயதான ஓவன் ஃப்ளவர்ஸ் ஆகியோரே மேற்படி தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர்.
ஜுபைர் இந்த ஹக்கிங்கை நேரலையாக ஒளிபரப்பியதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த காணொளி காட்சி குற்றவாளிகளுக்கு எதிரான முக்கிய சாட்சியாக சமர்ப்பிக்கப்பட்டதாக வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே கைது செய்யப்பட்ட பின்னரும் ஃபிளவர்ஸ் சிறையில் இருந்து தொடர்ந்து ஹக் செய்ய முயன்றார் என்றும், அரசுத் தரப்பு வழக்கறிஞர் சேவை மற்றும் அவர் தடுத்து வைக்கப்பட்டிருந்த சிறையுடன் தொடர்புடைய டொமைன்களை அணுகுவதற்கான தேடல் சொற்களையும் முயற்சிகளையும் கருவிகள் காட்டின என்றும் ஃபென்ஹால்ஸ் கூறினார்.
