6 தமிழ்த் தரப்புகளின் ஐக்கியத்தால் சாதகம் – நீதியரசர் விக்னேஸ்வரன் வரவேற்பு

தமிழ் பேசும் ஆறு அரசியல் தரப்புகள் ஒன்றிணைவது தமிழ் மக்களுக்கு ஒரு சாதகமான அறிகுறியாகும் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவருமான நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

நேற்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

சிங்கள மொழி பேசும் கட்சிகளிடமிருந்து தாங்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களுக்கு எந்தவொரு நிவாரணமும் கிடைக்காது என்ற எண்ணத்தில் அவர்கள் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்நாட்டிலுள்ள தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் எதிர்காலம் குறித்து அவதானம் செலுத்தியே அந்தந்தக் கட்சிகளின் தலைவர்கள் இந்தத் தீர்மானத்தை மேற்கொண்டுள்ளனர். தற்போதைய அரசின் செயற்பாடுகள் குறித்து வடக்கு, கிழக்கு மக்கள் திருப்தியடையவில்லை என்றும் சி.வி. விக்னேஸ்வரன் குறிப்பிட்டார்.

அதற்கான காரணமாக, அந்த மக்களின் தனியார் நிலங்களை இராணுவத்தினர் தொடர்ந்து தம்வசம் வைத்துள்ளமையை அவர் சுட்டிக்காட்டினார்.

சில நிலங்களில் விவசாய நடவடிக்கைகளை மேற்கொண்டு, அவற்றின் மூலம் கிடைக்கும் வருமானத்தை இராணுவத்தினர் பெற்றுக்கொள்கின்றனர் என்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கு வெளிப்படுத்தினார்.

இவ்வாறான காரணங்களால், தேசிய மக்கள் சக்தி அரசின் கீழ் தமிழ் மக்களுக்கு நிவாரணம் கிடைக்கும் என்று எதிர்பார்க்க முடியாது என்றார் அவர்.

தற்போதைய அரசும் தமிழ் மக்களை இரண்டாம் தரப் பிரஜைகளைப் போலவே நடத்துகின்றது என்றும், அவர்களுக்குச் சம உரிமைகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் சி.வி. விக்னேஸ்வரன் மேலும் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles