ஈரானின் ஆட்சியைக் கவிழ்க்கத் தவறியதால் மூத்த அதிகாரிகள் இருவரை இஸ்ரேலின் மொசாட் தலைவர் பணிநீக்கம் செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஈரானிய அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கான திட்டம் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, உளவு அமைப்பான மொசாட்டின் இரண்டு உயர் அதிகாரிகளை அதன் தலைவர் ரோமன் கோஃப்மேன் பணிநீக்கம் செய்துள்ளதாக இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பணிநீக்கம் செய்யப்பட்ட அதிகாரிகளில் ஒருவர் கடந்த டிசெம்பர் மாதம் முதல் மொசாட்டின் உளவுத்துறை இயக்குநரகத்தின் தலைவராகப் பணியாற்றி வந்தார். மற்றவர் அந்த அமைப்பின் ஈரான் பிரிவின் தலைவராவார்.
ஈரானில் உள்ள சிறுபான்மைக் குழுக்களை கிளர்ச்சியில் ஈடுபட வைப்பதன் மூலமும், அரசாங்கத்தை அகற்றுவதற்குப் பெருந்திரளான போராட்டங்களைத் தூண்டுவதன் மூலமும் ஈரானின் தலைமையைக் கவிழ்ப்பதற்கான எழுத்துப்பூர்வ திட்டத்தை இந்த இரு அதிகாரிகளும் தீட்டியதாக அந்த செய்திகள் தெரிவிக்கின்றன.
