Sangathy
India

கேரளாவில் அமீபிக் மூளைக்காய்ச்சலுக்கு மேலும் ஒரு மாணவன் உயிரிழப்பு..!

கேரளாவில் கடந்த சில மாதங்களாக அமீபிக் மூளைக்காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. நீர்நிலைகளில் குளிக்கும் போது தேங்கி நிற்கும் நீரில் இருக்கும் அமீபா, மூக்கின் வழியாக மனிதனின் உட லுக்குள் சென்று மூளையை தாக்கும் இந்த அரியவகை நோய் உயிர்ப்பலி வாங்கி வருகிறது.

கேரளாவில் கண்ணூரில் 13 வயது சிறுமியும், மலப்புரத்தில் 5 வயது சிறுமியும் ஏற்கனவே இந்த நோய்க்கு இறந்து விட்ட நிலையில், தற்போது கோழிக்கோட்டில் மேலும் ஒரு மாணவன் பரிதாபமாக இறந்துள்ளான்.

கோழிக்கோடு மாவட்டம் ராமநாட்டு நகர் பகுதியைச் சேர்ந்த அஜித் பிரசாத்-ஜோதி தம்பதியரின் மகனான மிருதுல் (வயது 12), 7-ம் வகுப்பு படித்து வந்தான். இவன் தனது பள்ளியின் அருகே உள்ள குளத்தில் குளித்து விட்டு வீட்டுக்கு வந்தது முதல் அமீபிக் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

வாந்தி மற்றும் தலைவ லியால் அவதிப்பட்ட அவனை சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மிருதுல் பரிதாபமாக இறந்தான். கேரளாவில் அமீபிக் மூளைக்காய்ச்சலுக்கு 3-வது உயிர்ப்பலி நிகழ்ந்திருப்பது பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Related posts

கலிபோர்னியாவில் நடந்த விபத்தில் கேரள மாநிலத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் பலி..!

tharshi

நடிகர் விஜயகாந்த் காலமானார் – கொரோனா தொற்று உறுதி

Lincoln

நாட்டை நாசமாக்கிய சொல் இலவசம்.. எதுக்கு மகளிர் உரிமைத் தொகை..? : சீமான் ஆவேசம்..!

tharshi

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy