Sangathy
Srilanka

வாக்குப்பதிவை சீர்குலைத்தால் துப்பாக்கி பிரயோகம்: பொலிஸாருக்கு அதிகாரம்

வாக்களிப்பு நிலையங்களில் இடையூறு விளைவிப்பவர்கள் வாக்குப்பதிவை சீர்குலைப்பவர்கள் மற்றும் தேர்தல் பணிகளை சீர்குலைக்கும் நபர்கள் மற்றும் குழுக்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ள பொலிஸாருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு வட்டாரங்களை மேற்கோள்காட்டி லங்காதீப நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் இடையூறு விளைப்பவர்களை உடனடியாக கைது செய்யுமாறும் பொலிஸாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் நாடு முழுவதும் சட்டவிரோத துப்பாக்கிகள் மற்றும் பாதாள உலகக் கும்பல்களை கைது செய்வதற்கான விசேட நடவடிக்கையொன்றும் அமுல்படுத்தப்படவுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் வட்டாரங்களை மேற்கொள்கோட்டி தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்காக விசேட புலனாய்வுக் குழுக்களும் ஈடுபடுத்தப்படவுள்ளதாக அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் சுமார் 02 லட்சம் சட்டவிரோத துப்பாக்கிகள் இருப்பதாக பாதுகாப்புப் படையினர் மதிப்பிட்டுள்ளனர்.

Related posts

குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தில் வரிசையில் காத்துக்கிடக்கும் மக்கள்..!

Tharshi

காதலியுடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக இளைஞன் தற்கொலை..!

Tharshi

கிளப் வசந்த் கொலை வழக்கு : சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல்..!

Tharshi

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy