Sangathy
India

தற்காப்பு சொல்லித்தர வந்த பயிற்சியாளரே 11 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கொடூரம்..!

டெல்லியில் பள்ளி மாணவிகளுக்குத் தற்காப்பு சொல்லித்தருவதற்காக வந்தபயிற்சியாளர் 11 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

மாணவிகளுக்கு தங்களை ஆபத்துகளிலிருந்து தற்காத்துக் கொள்ளும் வகையில் பயிற்சி அளிப்பதற்காக ஒப்பந்த அடிப்படையில் சதீஸ் என்ற நிபுணர் ஒருவர் என்.ஜி.ஓ தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலம் வடமேற்கு டெல்லியில் உள்ள சுல்தான்புரியில் அமைத்துள்ள பள்ளி ஒன்றில் பயிற்சியாளராகச் சேர்ந்துள்ளார்.

இந்நிலையில் பள்ளியில் படித்து வந்த 11 வயது மாணவிக்கு தற்காப்பு சொல்லித்தருவதாகக் கூறி தனியாக அழைத்துத் தகாத இடங்களில் தொட்டு பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக தெரிகிறது.

இதை அந்த மாணவி தனது பெற்றோர்களிடம் கூறிய நிலையில் மாணவியின் உறவினர்கள் மற்றும் அண்டை வீட்டார் போலீஸ் நிலையம் முன் திரண்டு பயிற்சியாளருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

இதனைத்தொடர்ந்து இந்த புகார் குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று டெல்லி அரசு தெரிவித்துள்ளது.

Related posts

நல்லவர்களுக்கு மீண்டும் வாக்கு கேட்டு வருவது எனக்கு பெருமையாக இருக்கிறது : கமல்ஹாசன்

tharshi

இளைஞனின் வயிற்றில் கத்தி, நகவெட்டி : அதிர்ச்சியில் வைத்தியர்கள்..!

Tharshi

இந்திய பாராளுமன்றத்தின் மேலவைக்கு பரிந்துரைக்கப்பட்ட பிரித்தானிய பிரதமரின் அத்தை..!

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy