Sangathy
News

இரு குழுக்கள் இடையிலான மோதலில் ஒருவர் பலி

Colombo (News 1st) இரத்தினபுரி – தெல்கொடை பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

தெல்கொடை பகுதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான 39 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார்.

இரு குழுக்களுக்கிடையில் நேற்று முன்தினம்(16) ஏற்பட்ட தகராறில் இருவர் காயமடைந்த நிலையில் கலவானை வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

சிகிச்சை பெற்று வந்த இருவரை பார்வையிடுவற்காக சென்ற சிலருக்கிடையில் வைத்தியசாலைக்கு முன்பாக மீண்டும் மோதல் வலுப்பெற்றுள்ளது.

இதன்போது கத்தியால் குத்தி ஒருவர் தாக்கப்பட்ட நிலையில் குறித்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக இரத்தினபுரி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மற்றுமொரு சந்தேகநபரை தேடி விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் கலவானை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

Power Minister suggests solar panels as a solution to rising power bills of temples

Lincoln

கட்சிகள் விரும்பினால் ஜனாதிபதி வேட்பாளராகத் தயார் – விக்னேஸ்வரன் அறிவிப்பு!

Lincoln

Press Institute expresses concern over proposed Anti-Terrorism Act

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy