Sangathy
Srilanka

கோழி இறைச்சியின் விலை மீண்டும் உயர்வு..!

பண்டிகைக் காலங்களில் கோழி இறைச்சியின் விலையை வியாபாரிகள் தன்னிச்சையாக உயர்த்தி வருவதாக நுகர்வோர் தெரிவித்துள்ளனர்.

பண்டிகைக் காலங்களில் கோழி இறைச்சி மற்றும் முட்டைகளின் விலை குறைக்கப்படும் என அரசாங்கம் உறுதியளித்த போதிலும் அவ்வாறான நிலைமை சந்தையில் காணப்படவில்லையென மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

முன்னர் கோழி இறைச்சியின் விலையானது 1,100 ரூபாவாக காணப்பட்டதோடு, தற்போது 1 கிலோ கோழி இறைச்சியின் விலையானது 1,500 ரூபாவாக காணப்படுகின்றது.

இதேவேளை, அதிகரித்துள்ள இறைச்சி மற்றும் முட்டையினது விலை எதிர்வரும் நாட்களில் குறைக்கப்படும் என கோழி பண்ணையாளர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார்.

Related posts

சபாநாயகரின் விசேட அறிவிப்புகள்..!

tharshi

ரயிலில் இருந்து தவறி விழுந்த சிறுமி..!

tharshi

பிள்ளைகளுக்கான புத்தகங்களை எடுக்க சென்ற மனைவியை கொன்ற கணவன்..!

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy