Colombo (News 1st) இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் இடம்பெற்ற ரயில் விபத்தில் இலங்கையர்கள் எவரேனும் உயிரிழந்தனரா அல்லது காயமடைந்தனரா என்பதனை ஆராய்ந்து வருவதாக இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

இந்த ரயில் விபத்தில் இலங்கையர் எவருக்கும் பாதிப்பு ஏற்பட்டதாக இதுவரை எந்தவொரு தகவலும் கிடைக்கவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அதிகாரிகளுடன் தொடர்புகொண்டு, தொடர்ச்சியாகத் தகவல்களைப் பெறுவதற்காக கன்சியூலர் அதிகாரி ஒருவர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here