Colombo (News 1st) அம்பலாங்கொடை நகரில் நேற்றிரவு(24) நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

முச்சக்கர வண்டியில் பயணித்த குறித்த நபர் மீது மோட்டார் சைக்கிளில் வந்த இருவரால் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

துப்பாக்கிப் பிரயோகம் நடத்திய சந்தேகநபர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.

அம்பலாங்கொடை – ரன்தொம்பே பகுதியை சேர்ந்த 56 வயதான ஒருவரே துப்பாக்கி சூட்டில் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் அம்பலாங்கொடை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here