ஐரோப்பிய ஒன்றியத்துடனான உறவுகளை மீண்டும் வலுப்படுத்த பிரித்தானியா முயற்சி

பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்துடனான உறவுகளை மீண்டும் வலுப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளது.

பிரித்தானிய பிரதமர் கியர் ஸ்டார்மர் (Keir Starmer) மே 19-ஆம் திகதி ஐரோப்பிய ஒன்றிய (EU) தலைவர்களை வரவேற்க உள்ளதாக டவுனிங் ஸ்ட்ரீட் அறிவித்துள்ளது.

இந்த சந்திப்பு, பிரித்தானியா-ஐரோப்பிய ஒன்றிய (Britain-EU) உறவை மீண்டும் வலுப்படுத்தும் முயற்சியின் முதல்படியாக அமையும் என கூறப்படுகிறது.

முதலாவது ஆண்டு சந்திப்பு

இந்த ஆண்டு முதல் ஆண்டு தோறும் இத்தகைய உச்சி மாநாடுகள் நடைபெறும் என்று அரசு உறுதிப்படுத்தியுள்ளது.

ஐரோப்பிய கவுன்சில் தலைவர் அண்டோனியோ கோஸ்டா (Antonio Costa) மற்றும் ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் (Ursula von der Leyen) ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்து கொள்வார்கள்.

Britain-EU உறவின் முக்கிய அம்சங்கள்
– வணிக ஒப்பந்தங்கள்: பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒருங்கிணைந்த சந்தை அல்லது சுங்க ஒன்றியத்தில் மீண்டும் சேராது என்று ஸ்டார்மர் உறுதியளித்துள்ளார்.

– வேளாண் மற்றும் தொழில்முறை ஒப்பந்தங்கள்: வெட்டினரி ஒப்பந்தம் மூலம் பிரித்தானியா வேளாண் பொருட்களின் ஏற்றுமதி மிருதுவாக நடைபெற வழிகள் பரிசீலிக்கப்படுகின்றன.

– Youth Mobility Programme: ஐரோப்பிய ஒன்றியம் பரிந்துரைத்த இத்திட்டம் குறித்து பிரித்தானிய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.

– கடல் மீன்பிடி உரிமைகள்: பிரித்தானிய கடல் பகுதியில் மீன்பிடி உரிமைகள் தொடர்பான பேச்சுவார்த்தை எதிர்பார்க்கப்படுகிறது.

– பாதுகாப்பு ஒத்துழைப்பு: இராணுவ மற்றும் பாதுகாப்பு ஒப்பந்தம் (defence and security pact) முக்கிய விடயமாக இருக்கலாம்.

பிரித்தானியா-ஐரோப்பிய ஒன்றிய உறவை புதுப்பித்து, பொருளாதார வளர்ச்சி மற்றும் பாதுகாப்பை உறுதிசெய்ய இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

UK,primeminister,KeirStarmer, EuropeanUnion

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles