இந்த வார இறுதிக்குள் மீதமுள்ள அனைத்து பணயக்கைதிகளையும் ஹமாஸ் விடுவிக்காவிட்டால், இஸ்ரேல் மீண்டும் தாக்குதலை தொடர வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார்.

ஹமாஸ் அமைப்பு சனிக்கிழமை திட்டமிடப்பட்ட பணயக்கைதிகளை விடுவிப்பதை தாமதப்படுத்துவதாகக் கூறியதைத் தொடர்ந்து, ட்ரம்ப் இந்த அறிவித்தலை விடுத்துள்ளார்.

இந்நிலையில் ட்ரம்பின் கருத்தானது, இது போர்நிறுத்தம் நீடிக்குமா என்பது குறித்து புதிய சந்தேகங்களை எழுப்பியுள்ளது .

ஹமாஸ் அமைப்பு
இது தொடர்பில் ட்ரம்ப் கருத்து தெரிவிக்கையில்,

“சிறைபிடிக்கப்பட்டவர்கள் குறித்து ஹமாஸ் அமைப்பு அச்சங்களை வெளிப்படுத்தி வருகின்றது.

எதிர்வரும் நாட்களில் பணயக்கைதிகள் விடுவிக்கப்படாவிட்டால் பலர் உயிர் பிழைக்க மாட்டார்கள்.

என்னைப் பொறுத்தவரை, சனிக்கிழமை மதியம் 12 மணிக்குள் அனைத்து பணயக்கைதிகளும் திருப்பி அனுப்பப்படவேண்டும்” என தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் மேற்கொண்டுள்ள பணயக்கைதிகள் போர்நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் மீறியதாகக் கூறியதற்கு பதிலளிக்கும் விதமாக, சனிக்கிழமை திட்டமிடப்பட்ட இஸ்ரேலிய பணயக்கைதிகளை விடுவிப்பதை தாமதப்படுத்த விரும்புவதாக ஹமாஸ் அறிவித்த சில மணி நேரத்திற்குள் ட்ரம்பின் கருத்துக்கள் வெளியாகியுள்ளன.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here