அமெரிக்காவின் கோல்ட் கார்ட் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
இந்தத் திட்டத்தின் மூலம் அமெரிக்கக் குடியுரிமையைப் பெற முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதியாகப் பொறுப்பேற்றதன் பின்னர், கோல்ட் கார்ட் எனும் திட்டத்தை டொனால்ட் ட்ரம்ப் அறிவித்தார்.
அதாவது 5 மில்லியன் அமெரிக்க டொலரை செலுத்தும் வெளிநாட்டவர்கள் இந்த கோல்ட் கார்டை பெறலாம்.
இதன்மூலம், அவர்கள் அமெரிக்கக் குடியுரிமையைப் பெற முடியும் என்று கூறப்பட்டிருந்தது.
இந்த நிலையில், கோல்ட் கார்ட் பெறும் திட்டம் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
இது கிரீன் கார்டை போன்றது எனவும், மிகவும் பயனுள்ளது எனவும் அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
