கதாநாயகனாக அறிமுகமாகிறார் தனுஷின் மகன் யாத்ரா

தனுஷின் மூத்த மகன் யாத்ரா நாயகனாக அறிமுகமாகவுள்ளார். இதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

தனுஷ் படங்களின் விழாக்களில் அவரது மகன்கள் யாத்ரா மற்றும் லிங்கா இருவரும் கலந்து கொள்வது வழக்கம். இருவருமே திரையுலகிற்கு மிகவும் பரிச்சியமானவர்கள். இதில் தனுஷின் மூத்த மகன் யாத்ரா நாயகனாக அறிமுகமாவது உறுதியாகி இருக்கிறது. இதற்கான கதை உருவாக்கும் படலத்தில் மும்முரமாக இருக்கிறார் தனுஷ்.

தனுஷ் இயக்கத்தில் அவரது மகன் யாத்ரா அறிமுகமாக இருக்கிறாரா அல்லது கதையை மட்டும் கொடுத்து வேறொரு இயக்குநர் இயக்கவுள்ளாரா என்பது விரைவில் தெரியவரும். ஆனால், யாத்ரா நாயகனாக அறிமுகமாக இருப்பது மட்டும் உறுதியாகி இருக்கிறது. இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.

தனுஷ் – ஐஸ்வர்யா தம்பதியினருக்கு பிறந்தவர்கள் யாத்ரா மற்றும் லிங்கா. சில வருடங்களுக்கு முன்பு இருவருமே விவகாரத்து பெற்றாலும், மகன்கள் விஷயத்தில் இருவருமே கலந்து ஆலோசித்து முடிவு எடுத்து வருகிறார்கள். இதனால் ரஜினியின் ஆசீர்வாதத்தில் விரைவில் யாத்ரா நாயகனாக அறிமுகமாகும் அறிவிப்பு வெளியாகக் கூடும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles