உத்தரகாண்டில் கங்கோத்ரி, யமுனோத்ரி, கேதார்நாத், பத்ரிநாத் ஆகிய புனித தலங்களுக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித யாத்திரை செல்கின்றனர்.

இது சார்தாம் யாத்திரை என்று அழைக்கப்படுகிறது.

உத்தரகாண்டில் சார்தாம் யாத்திரை தொடங்கியதை அடுத்து புகழ்பெற்ற கேதார்நாத் கோவில் இந்த மாதம் 3-ந்திகதி பக்தர்களின் வழிபாட்டுக்காக திறக்கப்பட்டது.

இந்த நிலையில் உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் இருந்து கேதார்நாத்துக்கு சென்று கொண்டிருந்த ஹெலிகாப்டர் ஒன்று காணாமல் போனது.

இன்று அதிகாலை குப்தகாஷிக்கு சென்று கொண்டிருந்த ஹெலிகாப்டர், கௌரிகுண்ட் அருகே விபத்துக்குள்ளானது.

அதில் விமானி (5 பெரியவர்கள் மற்றும் 1 குழந்தை) உட்பட ஆறு பயணிகள் இருந்தனர்.

ஹெலிகாப்டரில் இருந்த பயணிகள் உத்தரகண்ட், உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா மற்றும் குஜராத்தைச் சேர்ந்தவர்கள்.

நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளுக்காக தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படை குழுக்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன.

அந்த பகுதியில் வானிலை மிகவும் மோசமாக இருந்ததால், ஹெலிகாப்டர் வழி தவறி சென்றதாகக் கூறப்படுகிறது.

இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் பயணித்த 6 பேரும் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் கடந்த 12-ந் திகதி நடந்த விமான விபத்தில் 274 பேர் உயிரிழந்த நிலையில் இந்த ஹெலிகாப்டர் விபத்து அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here