Monday, February 2, 2026
HomeMain Newsநிலவைத் தாக்கும் விண்கல்… பூமியின் தகவல்தொடர்புகளுக்கு ஆபத்து

நிலவைத் தாக்கும் விண்கல்… பூமியின் தகவல்தொடர்புகளுக்கு ஆபத்து

2032ஆம் ஆண்டில் பூமியை நேரடியாகத் தாக்கும் என அஞ்சப்பட்ட அஸ்டீராய்டு 2024 YR4 என்ற விண்கல், தற்போது வேறு வழியில் ஆபத்தானதாக மாறக் கூடும் என வானியலாளர்கள் எச்சரிக்கின்றனர்.

இந்த விண்கல் நிலவைத் தாக்கக்கூடும். அப்படித் தாக்கினால், அது பெரிய வெடிப்பைத் தூண்டி, அதன் சிதறல் பூமியின் சுற்றுப்பாதையை நோக்கிப் பரவக்கூடும். இந்தச் சிதறல்கள் பூமியின் செயற்கைக்கோள்களை சேதப்படுத்தும் அபாயத்தைக் கொண்டிருக்கலாம்.

அதாவது, நேரடி மோதல் ஆபத்து இல்லாவிட்டாலும், நிலவு மீதான மோதல், பூமியின் தகவல் தொடர்பு, வானிலை ஆய்வு, ஜிபிஎஸ் போன்ற அத்தியாவசிய சேவைகளுக்குப் பயன்படுத்தப்படும் செயற்கைக்கோள்களுக்குப் அச்சுறுத்தலை ஏற்படுத்தலாம் என விஞ்ஞானிகள் கவலை தெரிவிக்கின்றனர். இந்த சாத்தியமான விளைவுகள் குறித்து மேலும் விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஜூன் 18 நிலவரப்படி, அஸ்டீராய்டு தொலைநோக்கிப் பார்வையில் இருந்து விலகுவதற்கு முன் கிடைத்த சமீபத்திய தகவல்களின் அடிப்படையில், இந்த மோதலுக்கான வாய்ப்பு 4.3% என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த விண்கல் 2028-ம் ஆண்டு வரை மீண்டும் தொலைநோக்கி பார்வைக்கு வராது. கனடாவின் வெஸ்டர்ன் ஒன்டாரியோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த வானியலாளர் பால் வீகர்ட் (Paul Wiegert), நிலவு மீதான இந்த மோதல் பூமியின் செயற்கைக்கோள் உள்கட்டமைப்பிற்கு கடுமையான இடையூறுகளை ஏற்படுத்தக்கூடும் என்று எச்சரித்துள்ளார்.

“நிலவில் இருந்து பார்க்கும்போது பூமி உண்மையில் சிறிய இலக்குதான், அதனால் மிகக் குறைவான பொருட்கள்தான் பூமியைத் தாக்கும் என்று உள்ளுணர்வாகத் தோன்றும். ஆனால், பூமியின் ஈர்ப்பு விசை சில குறிப்பிட்ட சூழ்நிலைகளில் அந்தப் பொருட்களை ஈர்க்கும் திறன் கொண்டது” என்று வீகர்ட் நியூ சயின்டிஸ்ட் (New Scientist) பத்திரிகைக்குத் தெரிவித்தார். அதாவது, நிலவு மீது விண்கல் மோதும்போது உருவாகும் சிதறல்கள், பூமியின் ஈர்ப்பு விசையால் இழுக்கப்பட்டு, பூமியைச் சுற்றும் செயற்கைக்கோள்களின் பாதையில் குறுக்கிடலாம். இது உலகளாவிய தகவல் தொடர்பு, ஜிபிஎஸ், வானிலை முன்னறிவிப்பு போன்ற அத்தியாவசிய சேவைகளுக்குப் பெரும் அச்சுறுத்தலாக அமையக்கூடும். இந்த அபாயம் குறித்து விஞ்ஞானிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

கனடாவின் வெஸ்டர்ன் ஒன்டாரியோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த வானியலாளர் பால் வீகர்ட் (Paul Wiegert) குழு, அத்தகைய மோதல் நிலவில் 1 கி.மீ. அகலமுள்ள பள்ளத்தை உருவாக்கக்கூடும் என்று மதிப்பிடுகிறது. கடந்த 5,000 ஆண்டுகளில் ஏற்பட்ட மிகப்பெரிய பள்ளமாக இருக்கலாம். பல இயற்கையான நிலவுப் பள்ளங்களை விட சிறியதாக இருந்தாலும், பூமியின் செயற்கைக்கோள்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் அளவுக்கு, அதிக வேகத்தில் சிதறல்களை விண்வெளியில் வெளியேற்றக்கூடும்.

10,000 முறைக்கும் மேலாக நடத்தப்பட்ட கணினி உருவகப்படுத்துதல்கள், இந்தச் சிதறல் மேகம் பரவலான செயலிழப்புகளை (malfunctions) ஏற்படுத்தக்கூடும் என்றும், முழுமையான அழிவை ஏற்படுத்தாது என்றும் தெரிவிக்கின்றன. இந்தச் சேதங்கள் பெரும்பாலும் மின்சார ஏற்ற இறக்கங்கள் (electrical surges) மற்றும் சென்சார் பிழைகளை (sensor errors) உருவாக்கக்கூடும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர். இந்த அச்சுறுத்தல் நமது விண்வெளி உள்கட்டமைப்பின் பாதுகாப்பிற்கு புதிய சவாலாக அமைந்துள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular