சட்டவிரோதமாக தங்கியதாக கைதான கனேடியருக்கு சிறையில் ஏற்பட்ட முடிவு..!

கனேடியரான புலம்பெயர் நபர் ICE அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, அமெரிக்காவை விட்டு வெளியேற்றப்பட்ட காத்திருந்த நிலையில் மரணமடைந்துள்ளார்.

புளோரிடாவின் மியாமியில் ICE சிறையில் காவலில் இருந்தபோது 49 வயதான ஜானி நோவியெல்லோ மரணமடைந்துள்ளார். அவரது மரண காரணம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

அவரது நிலை குறித்து மருத்துவ ஊழியர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவருக்கு அவசர சிகிச்சை அளித்தும் காப்பாற்ற முடியவில்லை என்றே கூறப்படுகிறது.

1988ல் அமெரிக்காவில் நுழைந்த நோவியெல்லோ 1991ல் நிரந்தர வதிவிட உரிமம் பெற்றுள்ளார். ஆனால் 2023ல் போதை மருந்து கடத்தல் வழக்கில் சிக்கியதால் அவரது வதிவிட உரிமம் பறிமுதல் செய்யப்பட்டது.

இதனையடுத்து கனடாவிற்கு அவரை நாடுகடத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது. மே மாதம் ICE அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டார். 2023 அக்டோபரில் அவருக்கு 12 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

கடந்த மாதம் புளோரிடா நன்னடத்தை அலுவலகத்தில் நோவியெல்லோவை கைது செய்த ICE அதிகாரிகள், ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பியதுடன், அவர் மீது நாடுகடத்தல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியது.

நோவியெல்லோவின் மரணம் தொடர்பில் கனேடிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் ICE தெரிவித்துள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles