இங்கிலாந்தில் உள்ள ஐந்து பகுதிகளில் கடும் வெப்பம் நீடிக்கக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
தற்போது மஞ்சள் விழிப்பு நிலையிலிருந்து ஆரஞ்சு விழிப்பு நிலைக்கு எச்சரிக்கை உயர்த்தப்பட்டள்ளது.
வெப்பம் காரணமாகப் பயணத் திட்டங்களில் இடையூறு ஏற்படலாம்.
சுகாதார சேவைகளுக்கான தேவையும் அதிகரிக்கலாம் என்று கூறப்படுகிறது.
இங்கிலாந்தின் மத்திய மற்றும் தென் பகுதிகளில் வெப்பம் அதிகமாய் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
குறைந்தது 3 நாள்களுக்கு அங்கு 34 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
