தங்காலையில் உள்ள ஒரு வீட்டில் போதைப்பொருட்களுடன் மூன்று லொறிகள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அந்த வீட்டின் புனரமைப்பு பணிகளில் ஈடுபட்டிருந்த நிலையில், திடீர் உடல் நலக்குறைவினால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்த நபரின் இரண்டு மகன்மார்களே இன்று (23) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
