Home Main News Middle East 5 பாலஸ்தீனர்களின் உடல்களை ஒப்படைத்தது இஸ்ரேல்

5 பாலஸ்தீனர்களின் உடல்களை ஒப்படைத்தது இஸ்ரேல்

0
5 பாலஸ்தீனர்களின் உடல்களை ஒப்படைத்தது இஸ்ரேல்

இஸ்ரேல்- காசா (ஹமாஸ்) இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது.

இதன் முதல் கட்டமாக பிணைக்கைதிகள் மற்றும் பிணைக்கைதிகள் உடல்களை ஹமாஸ் ஒப்படைக்க வேண்டும்.

அதேபோல் இஸ்ரேல் சிறையில் உள்ள பாலஸ்தீன கைதிகள் மற்றும் பாலஸ்தீனர்களின் உடல்களை இஸ்ரேல் ஒப்படைக்க வேண்டும்.

இதன்படி உயிரோடு இருந்த 20 பிணைக்கைதிகளை ஹமாஸ் விடுவித்தது.

அதன்பின்னர் 2023ஆம் ஆண்டு தாக்குதலில் உயிரிழந்த இஸ்ரேலியர்களின் உடல்களை ஒப்படைத்து வருகிறது.

அதனடிப்பையில் நேற்றிரவு 3 இஸ்ரேல் ராணுவ வீரர்களின் உடல்களை ஹமாஸ் ஒப்படைத்தது.

இதனைத் தொடர்ந்து 45 பாலஸ்தீனர்களின் உடல்களை இஸ்ரேல் இன்று ஒப்படைத்துள்ளது.

இந்த உடல்கள் நாசர் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here