திருகோணமலை மற்றும் முல்லைத்தீவு பகுதிகளுக்கு இடைப்பட்ட கடற்பரப்பு மற்றும் வவுனியா வடக்கு பகுதியில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கம் இன்று சனிக்கிழமை பிற்பகல் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நிலநடுக்கமானது 3.5 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாக புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.
கடற்பகுதியில் நில அதிர்வு பதிவாகியிருந்தாலும் அப்பகுதியில் வசிக்கும் மக்களும் இந்த அதிர்வை உணர்ந்தனர் என கூறப்படுகிறது.
