பிரான்ஸில் இடம்பெற்ற வாள்வெட்டில் ஈழத்தமிழ் இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டார். மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார்.
பிரான்ஸில் ஈழத் தமிழ் மக்கள் அதிகம் வாழும் பகுதிகளில் ஒன்றான பொபினியில் கடந்த 2ஆம் திகதி இரவு இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குழு ஒன்று தமிழ் இளைஞர்கள் இருவர்மீது வாள்வெட்டு தாக்குதலை நடத்தியதாகவும் அதில், 31 வயது இளைஞர் உயிரிழந்தார் என்றும் 23 வயது இளைஞர் ஒருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இந்த வாள்வெட்டு சம்பவம் தொடர்பில் பொபினி நகர பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
