கொழும்பிலுள்ள புனித கங்காராம விகாரையில் புனித தேவ்னிமோரி சின்னங்களின்
தரிசனத்தை ஆரம்பித்து வைத்தமைக்காக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார்.
தனது எக்ஸ் தள பதிவொன்றில் இந்திய பிரதமர் இவ்வாறு கூறியுள்ளார். அந்த பதிவில் மேலும் தெரிவித்துள்ளதாவது-
கடந்த 2025 ஏப்ரலில் எனது விஜயத்தின்போது இச்சின்னங்களை இலங்கைக்கு அனுப்புவது குறித்து தீர்மானிக்கப்பட்டதுடன் அதன் அடிப்படையில் மக்கள் வழிபாட்டினை மேற்கொள்வதற்கான வாய்ப்பு கிடைக்கப்பெற்றுள்ளது.
நமது நாடுகள் ஆழமான நாகரீக மற்றும் ஆன்மீக பிணைப்புகளினால் இணைக்கப்பட்டுள்ளன.
புத்த பெருமானின் கருணை, அமைதி மற்றும் நல்லிணக்கம் குறித்த காலத்தால் அழியாத செய்தியானது தொடர்ந்து மனித குலத்துக்கு வழிகாட்டட்டும்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
