‘வடக்கின் பெரும் போர்’ கிரிக்கெட்போட்டி நாளை ஆரம்பம்!

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மற்றும் யாழ்ப்பாணம் பரியோவான் கல்லூரி ஆகியவற்றுக்கு இடையிலான ‘வடக்கின் பெரும் போர்’ என்றழைக்கப்படும் மாபெரும் கிரிக்கெட் போட்டி நாளை ஆரம்பமாகவுள்ளது.

இந்த கிரிக்கெட் போட்டி இம்முறை 119ஆவது முறையாக நடத்தப்பட உள்ளது.

119ஆவது போட்டி நாளை முதல் 7ஆம் திகதி வரை யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெறவுள்ளது.

தொடர்ந்து, 23ஆவது மட்டுப்படுத்தப்பட்ட பந்து வீச்சுக்கான (50 ஓவர்கள்) போட்டி மார்ச் 14ஆம் திகதியன்று புனித பரியோவான் கல்லூரி மைதானத்தில் நடைபெறும்.

வரலாற்றுப் பாரம்பரியம் கொண்ட முதலாவது வடக்கின் பெரும் போர் 1904 ஆம் ஆண்டில் நடைபெற்றது.

இதுவரை இடம்பெற்ற 118 போட்டிகளில் புனித பரியோவான் கல்லூரி 40 போட்டிகளிலும், யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி 29 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. அத்துடன், 41 போட்டிகள் வெற்றி தோல்வியின்றி நிறைடைந்தன. மேலும், 07 போட்டிகளுக்கான முடிவுகள் கிடைக்கப்பெறவில்லை என்பதுடன் ஒரு போட்டி இடையில் கைவிடப்பட்டது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles