இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் ஷம்மி சில்வா இன்று புதன்கிழமை முதல் அமுலுக்கு வரும் வகையில் தனது பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ளார்.
அவருடன் இணைந்து, இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் ஏனைய உத்தியோகபூர்வ அதிகாரிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களும் தமது பதவிகளை இராஜினாமா செய்துள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தீர்மானம் குறித்த விபரங்கள் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே ஆகியோருக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக அந்த ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
