நாங்கள் கடற் கொள்ளையர்கள் போல் நடந்துகொண்டோம் – ட்ரம்ப்

ஹோர்​முஸ் நீரிணையில் கொள்​ளை​யர்​கள் போல நடந்து கொண்டு கச்சா எண்​ணெய் கப்​பல்​களை கைப்பற்றினோம் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரி​வித்​தார்.

அமெரிக்​கா, இஸ்​ரேல் கூட்​டுப்படைகள் – ஈரான் இடையே போரை நிறுத்​து​வதற்​காக பாகிஸ்​தான் மத்​தி​யஸ்​தம் செய்ய முன்​வந்​ததைத் தொடர்ந்து போர் நிறுத்​தம் அமுலில் உள்​ளது.

இந்​நிலை​யில் ஹோர்​முஸ் நீரிணையில் ஈரான் தடுப்​பு​களை ஏற்படுத்​திய போதும், கச்சா எண்​ணெய்யை ஏற்​றிச் சென்ற ஒரு கப்பலை கைப்​பற்​றிய​தாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

சுமார் 20 லட்​சம் பீப்பாய்கள் கொண்ட கச்சா எண்​ணெய்யை ஏற்​றிச் சென்ற கப்​பலை இடைமறித்து அதை தங்​களது கட்​டுப்​பாட்​டில் எடுத்​துக் கொண்​ட​தாக அதிபர் ட்ரம்ப் தெரி​வித்​துள்​ளார்.

இதுதொடர்​பாக அதிபர் ட்ரம்ப் கூறும்​போது, ‘நாங்​கள் அந்​தக் கப்பலில் இருந்த சரக்​கைக் கைப்​பற்​றினோம். எண்​ணெய்​யைக் கைப்​பற்​றினோம். இது மிக​வும் லாபகர​மான தொழில். நாங்​கள் கடற்​கொள்​ளை​யர்​களைப் போன்​றவர்​கள்’ என்று கூறி​யுள்​ளார்.

உலகளா​விய எண்​ணெய் விநி​யோகத்​துக்​கான முக்​கிய பாதை​யாக திகழும் ஹோர்​முஸ் நீரிணை உள்​ளிட்ட முக்​கிய நீர்​வழிகளில் அமெரிக்கா தனது ராணுவ இருப்பை அதி​கரித்​து வரு​கின்றமை குறிப்​பிடத்​தக்​கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles