யாழ்ப்பாணம் கோப்பாயில் இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.
கோப்பாய் பிரதேச செயலகத்திற்கு நேற்று திங்கட்கிழமை நள்ளிரவு மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த இரு இளைஞர்கள் வேக கட்டுப்பாட்டை இழந்து வீட்டின் மதிலுடன் மோதியதில் குறித்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணத்திலிருந்து பருத்தித்துறை நோக்கிப் பயணித்தவேளை குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. இதன்போது கரவெட்டி வடக்கைச் சேர்ந்த சிவதாசன் துசிந்தன் (வயது 22), ஏழுமலை துசாந்தன் (வயது 24) ஆகிய இரண்டு இளைஞர்கள் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர்.
இருவரதும் சடலமும் பிரேத பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
விபத்து சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிசார் விசாரனைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
