சிங்கப்பூர் அதிபர் தர்மனுக்கு 21 பீரங்கி குண்டுகள் முழங்க மலேசியாவில் வரவேற்பு!

மலேசியாவிற்கு முதன்முறையாக அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்தினத்திற்கு இன்று (13) இஸ்தானா நெகாராவில் 21 பீரங்கி குண்டுகள் முழங்க பிரம்மாண்டமான அரசுபூர்வ வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதிபர் தர்மன் சண்முகரத்தினம் மற்றும் அவரது துணைவியார் ஜேன் இட்டோகி சண்முகரத்தினம் ஆகியோர் இன்று காலை 10 மணியளவில் இஸ்தானா நெகாராவிற்கு வருகை தந்தபோது, மலேசிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் மற்றும் பேரரசி ராஜா ஜாரித் சோஃபியா ஆகியோர் அவர்களைத் தங்களின் சிறப்பான வரவேற்பளித்து வரவேற்றனர்.

இந்நிகழ்வில் மலேசியப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், அவரது துணைவியார் டத்தோ ஸ்ரீ டாக்டர் வான் அசிஸா வான் இஸ்மாயில், துணைப் பிரதமர்களான டத்தோ ஸ்ரீ டாக்டர் அகமட் ஜாஹித் ஹமிடி, டத்தோ ஸ்ரீ ஃபடில்லா யூசுப் மற்றும் அமைச்சரவை அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

அரச மலாய் இராணுவப் படைப்பிரிவின் மத்திய இசைக்குழுவினர் இரு நாடுகளின் தேசிய கீதங்களையும் இசைக்க, அதிபர் தர்மன் 21 பீரங்கி குண்டுகள் முழங்க கௌரவிக்கப்பட்டார். தொடர்ந்து, முதலாம் பட்டாலியன் அரச மலாய் இராணுவப் படைப்பிரிவினரின் அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக்கொண்டார்.

மாமன்னரின் அதிகாரப்பூர்வ அழைப்பின் பேரில் ஜூலை 13 முதல் 15 வரை 3 நாட்களுக்கு அதிபர் தர்மன் மலேசியாவில் தங்கியிருப்பார். கடந்த 2024 மே மாதம் மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் சிங்கப்பூருக்கு மேற்கொண்ட அரசுமுறைப் பயணத்திற்குப் பதில் பயணமாக இது அமைந்துள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles