ஜப்பானில் கோடை காலத்தில் நிலவி வரும் கடுமையான வெப்ப அலையை எதிர்கொள்ளும் வகையில், ‘மனிதர்களுக்கான ஃபிரிட்ஜ்’ எனும் புதுமையான குளிரூட்டும் மையங்கள் அங்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த மையங்கள் தெருக்களில் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளன.
வீதிகளில் காணப்படும் குளிர்பான விற்பனை இயந்திரங்களின் மாதிரியை அடிப்படையாகக் கொண்டு இவை வடிவமைக்கப்பட்டுள்ளன.
இந்த இயந்திரத்தின் உள்ளே வெப்பநிலை எப்போதும் 15°C அளவில் பராமரிக்கப்படுகிறது. ஒருவர் உள்ளே சென்று அமர்ந்தவுடன், தலை, கழுத்து மற்றும் முதுகுப் பகுதியில் 5°C அளவிலான குளிர்ந்த காற்று வீசி, வெறும் 5 நிமிடங்களில் உடலை உடனடியாகக் குளிர்விக்கிறது.
உடல் அளவுக்கு அதிகமாகக் குளிர்வடைவதைத் தடுக்க, 20 நிமிடங்களில் இது தானாகவே இயங்குவதை நிறுத்திக் கொள்ளும் அதிநவீன வசதியும் பொருத்தப்பட்டுள்ளது.
முக்கியமாக கட்டிட வேலை செய்யும் தொழிலாளர்கள், தொழிற்சாலை ஊழியர்கள் மற்றும் வீதிகளில் செல்பவர்கள் வெப்ப பக்கவாதத்திலிருந்து தங்களை தற்காத்துக் கொள்ள இந்த வசதி உதவியாக இருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
