லண்டனில் பெரும் வேலைநிறுத்தத்திற்கு தயாராகும் பேருந்து ஓட்டுநர்கள்

லண்டனில் உள்ள எட்டு பணிமனைகளைச் சேர்ந்த 1,500 இற்கும் மேற்பட்ட பேருந்து ஓட்டுநர்கள் பெரும் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர் என அறிவித்துள்ளனர்.

அரிவா நோர்த் லண்டன் (Arriva North London) நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்களே மேற்படி வேலை நிறுத்தத்தை முன்னெடுக்கவுள்ளனர் என அறிவித்துள்ளனர்.

ஓகஸ்ட் முதல் ஒக்ரோபர் மாதம் வரை 26 நாட்கள் வேலைநிறுத்தத்தை முன்னெடுக்கவுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.

இதனால், வடக்கு லண்டன் மற்றும் எசெக்ஸ் முழுவதும் பேருந்து சேவைகள் பாதிக்கப்படும்.

கடுமையான வெப்பத்தின் போது ஓட்டுநர்களைப் பாதுகாக்க நிலைமைகளை மேம்படுத்துமாறு அரிவா நிறுவனத்தை தொழிற்சங்கம் வலியுறுத்தியுள்ளதுடன், நிலைமைகள் குறித்த முறைப்பாடுகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கத் தவறியதாகவும் அந்நிறுவனத்தின் மீது குற்றம் சாட்டியுள்ளது.

சமீபத்திய வெப்ப அலையின்போது ஓட்டுனர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டனர் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles