Sangathy
News

மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான குழுக்களை நியமித்தல் குறித்து தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் எச்சரிக்கை

Colombo (News 1st) மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் தொடர்பான பல்வேறு குழுக்களை நியமித்து, ஜனநாயக மக்கள் பிரதிநிதித்துவ சபைகளை நிறைவேற்று அதிகாரத்தின் கீழ் கொண்டுசெல்லும் நிலைமை காணப்படுவதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

இதன்மூலம் மக்கள் பிரதிநிதித்துவ நிறுவனங்களின் செயற்பாடுகளுக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையம் கூறியுள்ளது.

இதேவேளை, தற்போது அதிகாரிகளின் கட்டுப்பாட்டிலுள்ள உள்ளூராட்சி மன்றங்களின் நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக பிரதமர் தலைமையிலான குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று(25) நடவடிக்கை எடுத்திருந்தார்.

Related posts

பயங்கரவாத விசாரணை பிரிவில் இன்று(19) ஆஜராகுமாறு முன்னாள் சட்ட மா அதிபர் தப்புல டி லிவேராவிற்கு அழைப்பு

Lincoln

கிளிநொச்சியில் பாடசாலை விளையாட்டுப் போட்டியின் போது சரமாரி தாக்குதல்: நால்வருக்கு விளக்கமறியல்

Lincoln

உத்தேச நெல் கொள்வனவு வேலைத்திட்டத்திற்கு அனுமதி

John David

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy