Sangathy
News

பொலிஸ் அதிகாரிகளுக்கு சுயாதீனமாக பணிபுரிவதற்கான சூழலை ஏற்படுத்திக் கொடுக்குமாறு PAFFREL கடிதம்

Colombo (News 1st) பொலிஸ் அதிகாரிகளுக்கு அரசியல் அழுத்தங்கள் இன்றி, சுயாதீனமாக பணிபுரிவதற்கான சூழலை ஏற்படுத்திக் கொடுக்குமாறு
PAFFREL அமைப்பு தேசிய பொலிஸ் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவருக்கு இந்த விடயம் தொடர்பில் கடிதமொன்று அனுப்பப்பட்டுள்ளது.

பொலிஸ் திணைக்களத்தில் அரசியல் தலையீடு காணப்படுவதன் காரணமாக நடுநிலைமை, கௌரவத்தை பாதுகாக்கும் வகையில் செயற்படுவது சிக்கலாகி வருவதாக PAFFREL அமைப்பு தமது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளது.

அரசியல்வாதிகளின் தூரநோக்கற்ற ஆட்சியினால் நாடு பாரிய பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ள நிலையில், பொலிஸ் அதிகாரிகளுக்கு சுயாதீனமாக செயற்படுவதற்குள்ள சந்தர்ப்பம் இல்லாமற்போகுமாயின், சட்டத்தை மதிக்கும் சாதாரண பொதுமக்களும் விரக்தியடைவதைத் தவிர்க்க முடியாது என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

யாழ்ப்பாணத்தில் அதிகூடிய மழைவீழ்ச்சி பதிவு

Lincoln

Poland missile attack: US President says ‘unlikely’ that missile fired from Russia

Lincoln

இலங்கை கடற்பரப்பில் மீன் பிடித்த 22 இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்

John David

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy