Colombo (News 1st) திக்வெல்ல – தெமட்டபிட்டிய குமாரதுங்க மாவத்தையில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காரொன்றில் வந்த இருவரால் இந்த துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளதுடன், இருவரும் தப்பியோடியுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
காயமடைந்த நபர் மாத்தறை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன் சந்தேகநபர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
You must be logged in to post a comment.