Sangathy
News

நாடு வங்குரோத்து அடைவதற்கான காரணங்களை கண்டறிய பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் ஆலோசனையை பெற தீர்மானம்

Colombo (News 1st) நாடு வங்குரோத்து அடைவதற்கான காரணங்களைக் கண்டறிய பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் ஆலோசனையைப் பெறுவதற்கு பாராளுமன்றத்தின் விசேட குழு தீர்மானித்துள்ளது.

அனைத்து பல்கலைக்கழகங்களினதும் பொருளியல் பீட தலைவர்களுடன் கலந்துரையாடுவதற்கு தமது குழு தீர்மானித்துள்ளதாக நாட்டின் வங்குரோத்து நிலைக்கான காரணங்களை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட பாராளுமன்ற விசேட குழுவின் தலைவர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

நாடு வங்குரோத்து நிலையை அடைவதற்கான காரணங்களை கையாள்வதற்கான அடிப்படை திட்டத்தை குறித்த புத்திஜீவிகளுடன் கலந்தாலோசித்து தயாரிக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

நாடு வங்குரோத்து அடைவதற்கான காரணத்தை கண்டறிவதே தமது குழுவின் முக்கிய நோக்கம் என சாகர காரியவசம் தெரிவித்தார்.

எதிர்காலத்தில் இவ்வாறானதொரு நிலைமை ஏற்படாதவாறு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பில் பரிந்துரைகள் மேற்கொள்ளப்படும் என நாட்டின் வங்குரோத்து நிலைக்கான காரணங்களை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட பாராளுமன்ற விசேட குழுவின் தலைவர் சாகர காரியவசம் மேலும் கூறினார்.

Related posts

Colombo (News 1st) ரயில் நிலைய பொறுப்பதிகாரிகளின் பணிப்பகிஷ்கரிப்பு முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இன்று(11) ரயில் சேவைகள் வழமை போன்று முன்னெடுக்கப்படுவதாக ரயில் போக்குவரத்து கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. ரயில் நிலைய பொறுப்பதிகாரிகளின் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக நேற்று(10) 24 ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டிருந்தன. 10 அலுவலக ரயில்கள், 6 தபால் ரயில்கள் மற்றும் தூரசேவை ரயில்கள் இரத்து செய்யப்பட்டதாகவும் நேற்று(10) சில ரயில் சேவைகள் தாமதமானதாகவும் ரயில்வே பிரதி பொது முகாமையாளர் M.J.இதிபொலகே தெரிவித்துள்ளார். ரயில்வே வணிக பிரதி பொதுமுகாமையாளர் பதவிக்கு ஊழல்வாதி என தெரிவிக்கப்படும் ஒருவரை நியமிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கம் நேற்று முன்தினம்(09) நள்ளிரவு முதல் பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுத்தது. இதன் காரணமாக நாட்டின் பல பகுதிகளிலும் ரயில் பயணிகள் பாரிய அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்திருந்தனர்.

Lincoln

நடத்துனர்கள் இன்றி அதிவேக வீதியில் இன்று(19) முதல் பஸ் போக்குவரத்து

Lincoln

Colombo (News 1st) சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உடனடியாக பதவி விலக வேண்டுமென வலியுறுத்தி சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளினால் உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சுக்கு முன்பாக முன்னெடுக்கப்படும் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் சிவில் அமைப்புகளின் பிரதிநிகள், சட்டத்தரணிகள், வைத்தியர்கள் உள்ளிட்ட தரப்பினர் கலந்துகொண்டுள்ளனர். இவர்கள் சுகாதார அமைச்சுக்கு முன்பாக உண்ணாவிரதத்தை ஆரம்பிக்க தயாரான போது, பொலிஸாரினால் இடையூறு ஏற்படுத்தப்பட்டது. பின்னர் வேறொரு இடத்திலிருந்து உண்ணாவிரதத்தை ஆரம்பிக்க சிவில் செயற்பாட்டாளர்கள் நடவடிக்கை எடுத்தனர்.

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy